Sunday, September 25, 2011

pirai thedum iravile song lyrics

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா

இருளில் கண்ணீரும் எதற்கு..
மடியில் கண்மூட வா..
அழகே இந்த சோகம் எதற்கு..
நான் உன் தாயும் அல்லவா..

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா



அழுதால் உன் பார்வையும்
அயந்தால் உன் கால்களும்
அதிகாலையில் கூடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா
என் ஆயுள் ரேகை நீயடி என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
எனை சுடும் பனி..

உனக்கென என வாழும் இதயமடி
உயிர் உள்ள வரை நான் உன் அடிமையடி

பிறை தேடும் இரவிலே உயிரே
என்னை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா..

விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே ஏழு ஜென்மம் தாங்குவேன்
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே மீசை வைத்த பிள்ளையே
இதை காதல் என்று சொல்வதா?
நிழல் காய்ந்து கொள்வதா
தினம் கொள்ளும் இந்த பூமியில்,
நீ வரும் வரும் இடம்.

Monday, January 24, 2011

adada en meethu devathai vaasanai pathinaru

அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்


யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ


உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ


ரம்யம் ததும்பும் கனவு, உன்னை கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில், இன்று சக்கரை திறலுதே
போய் வரும் வீதியில் ஏனோ, புது வாசனை கமலுதே
காதலின் பாடலை இங்கே, இரு ஜீவன் பாடிடுதே


ல ல ல ல லால..லால..
ல ல ல ல ல ல லால..லா..


மௌனம் வந்து இடியை போல, மனதில் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம், உண்மை நாம் உணர்ந்தோம்
ஏன் கலந்தோம், நம் கனவில், நாம் அலைந்தோம்



காற்றினில் அலையும் இறகு, எந்த பறவை உதிர்ததோ
காதலில் மயங்கும் மனது, அந்த கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில், புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலை கொண்டு, நம்மை காதலும் வருடுதோ
உன்னை கண்ட நாளில் இருந்து, எனது வாழ்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி, உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேசம் இல்லை, இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை, பனி துளியில் சாயம் இல்லை


அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ


உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ


படம்: பதினாறு
இசை: யுவன் ஷங்கர் ராஜா

Monday, January 10, 2011

Kaatrin Mozhi Oliya - Mozhi

Song: Kaatrin Mozhi Oliya Isaiya
Movie: Mozhi
Lyrics: Vairamuthu
Music: Vidhyasagar





some of the comments for this song...in youtube


this movie must be watched. the actress is deaf and mute. the actor explore the sense of music through muteness (??) and accompolish succession as he makes her fall in love with him. she doesn't like it when people feel pitty for her, she tries to accomodate the fact that being mute and deaf is normal and she tries to live along with it. but the guy tries to point out that being deaf and mute is more than normal, its a god-sent gift that shouldn't be wasted (??)


Jyothika should have got an award!

even a special recognision would have been good...but she got nothing...why?!

she was amazing in Mozhi



காற்றின் மொழி ஒலியா.....இசையா......?
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

Thursday, December 23, 2010

pookkal pookkum tharunam - madarasa pattinam

படம்: மதராசப்பட்டிணம்
இசை: GV பிரகாஷ்
பாடியவர்கள்: GV பிரகாஷ், ரூப்குமார், ஹரிணி, அண்ட்ரியா


This is such a great blend of great romantic poetic tune and poetic lyrics...
It feels like i am falling in love when listening to this song...


Some comments from users in youtube for this song....
http://www.youtube.com/comment_servlet?all_comments=1&v=j52fq_KIrJs

"BEAUTIFUL
simply amazing poetry and tune and voices
its perfectt
if we had songs like this today..
PROUD TO BE TAMIZHA
"


" You are a classic example to prove that language is no barrier to music :) As Mr.Deaquarius put it - this is a period film, set in 1947, the year when India got its freedom from British rule. The girl, a governors daughter falls in love with a guy who launders clothes for the English. The gal doesnt know the language 'Tamil' and the guy doesnt know English. But they manage to communicate somehow and this dreamy song erupts as they try to communicate by learning each others' languages."

"This song describes love in its purest form. It is beyond beautiful! " i saw 16 times this film in theatre.....after seeing this film I can't sleep well yet.I feel ......I can't say what that is....But I can tell only one thing...Those who are not watch this movie, YOU SHOULD WATCH THIS MOVIE WITH FAMILY.....................Amy jackson, you broken our hearts..........We Indians Love you........Jai hind..."





பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே இது எதுவோ
இரவும் விடிய வில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே
வேரின்றி விதியின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே
வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே..

ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏன் என்று கேட்காமல் தடுத்தாளும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)

Sunday, June 6, 2010

thendral vanthu theendum pothu - avatharam

Comments of some listeners on this song...

"What a composition!!! this song is miles ahead of the craps coming out these days! The strings and chorus are awesome! Dictionary of how to compose a melody. May god give IR loooong life to give us such great compositions."

"Like someone said , no matter what shit your life is going through , you listen to songs like this and I swear those 4 minutes of your life will seem worth it.
Indha madhri thendral vandhu nammala theendum podhum , enna vannamo , sathyama solla theriyale :( .. Sollama irukarathu thaan innum inikithu. Appadi patta oru divinity thaan Raja Sir"







தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்ன கண்ணே
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல
ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல
நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது
குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா
கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா
கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல
வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன வண்ணங்கள் என்ன என்ன
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல