Monday, January 24, 2011

adada en meethu devathai vaasanai pathinaru

அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்


யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ


உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ


ரம்யம் ததும்பும் கனவு, உன்னை கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில், இன்று சக்கரை திறலுதே
போய் வரும் வீதியில் ஏனோ, புது வாசனை கமலுதே
காதலின் பாடலை இங்கே, இரு ஜீவன் பாடிடுதே


ல ல ல ல லால..லால..
ல ல ல ல ல ல லால..லா..


மௌனம் வந்து இடியை போல, மனதில் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம், உண்மை நாம் உணர்ந்தோம்
ஏன் கலந்தோம், நம் கனவில், நாம் அலைந்தோம்



காற்றினில் அலையும் இறகு, எந்த பறவை உதிர்ததோ
காதலில் மயங்கும் மனது, அந்த கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில், புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலை கொண்டு, நம்மை காதலும் வருடுதோ
உன்னை கண்ட நாளில் இருந்து, எனது வாழ்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி, உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேசம் இல்லை, இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை, பனி துளியில் சாயம் இல்லை


அடடா என் மீது தேவதை வாசனை காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும் காதல் இதுவோ
உன்னை காணும், வரம் போதும், எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும், எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை யார் பார்த்ததோ


உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும் காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும் காதல் அதுவோ


படம்: பதினாறு
இசை: யுவன் ஷங்கர் ராஜா

Monday, January 10, 2011

Kaatrin Mozhi Oliya - Mozhi

Song: Kaatrin Mozhi Oliya Isaiya
Movie: Mozhi
Lyrics: Vairamuthu
Music: Vidhyasagar





some of the comments for this song...in youtube


this movie must be watched. the actress is deaf and mute. the actor explore the sense of music through muteness (??) and accompolish succession as he makes her fall in love with him. she doesn't like it when people feel pitty for her, she tries to accomodate the fact that being mute and deaf is normal and she tries to live along with it. but the guy tries to point out that being deaf and mute is more than normal, its a god-sent gift that shouldn't be wasted (??)


Jyothika should have got an award!

even a special recognision would have been good...but she got nothing...why?!

she was amazing in Mozhi



காற்றின் மொழி ஒலியா.....இசையா......?
பூவின் மொழி நிறமா....மணமா....?
கடலின் மொழி அலையா...நுரையா....?
காதல் மொழி விழியா....இதழா......?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல மெளனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சிமீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை.
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை