Monday, May 12, 2008

pottu vaitha oru vatta nila

படம் - இதயம்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் எனை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று எனை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம் தான் காதோரம்
பாடல் கூறும்

ஆறாத ஆசைகள் தோன்றும் எனை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னைக் கொல்லும் எந்நாளும்

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனிக் காற்று
வினாத்தாள் போல் இங்கே கனாக்காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய்க் கூடும் ஒன்றாய்ப் பாடும்
பொன்னாள் இங்கு எந்நாளோ

No comments: